Sunday, June 29, 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன் - (பகுதி 4)

ம்பன் காட்டும் கன்னிகண்ணுள் நுழைந்த
கள்வனைக் கண்ணால் சிறைசெய்துநெஞ்சச்
சிறையில் அடைத்துவிட்டதோடு நிற்கவில்லை
அந்தப்பஞ்சவண்ணக் கிளி!தன்னையும்
அவனையும் பள்ளி அறையில் கொண்டு
போய்ச்சேர்க்கும்படித் தோழியை வேண்டுகிறாள்.

கண்ணதாசனின் கன்னியோகண்மூடிக் காத்திருப்பேன்
எனக் காத்திருக்கிறாள்.அவனுக்காகவே அவள்
பூத்திருக்கிறாள்.

கம்பனின் உலாவியற் படலத்தில்இது போலப்
பல பாடல்கள்இலக்கிய உலகின் இன்ப உச்சிக்குக்
இட்டுச்செல்லும்இனிய ஆடல்கள்!

பருவப் பெண்கள்இராமனின் அழகு நலன்களை
எல்லாம்பகுதிபகுதியாகப் பாhத்துப் பார்த்துப்
பருகுகிறார்கள்!திருமேனி அழகைத் தீண்ட
முடியாமல் உருகுகிறார்கள்!
உதித்த சூரியனாய் உலா வரும் அவன்
மேனியில்பதித்த இடத்திலிருந்து பார்வையை
மீட்க முடியவில்லையாம்!வாள்கண் நங்கையர்
தம் கண்கள்ஆடவர்கள் மேல் முதலில் பாயும்
இடம்தோள்களாம்! பல இடங்களில்கம்பன் சொல்கிறான்.
(ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்'என்று
கம்பன் கூறுவதைக் கவனத்தில கொள்க!)

பாதையோடு செல்லும் முனிவனின் பின்னால்
இராமன் செல்கிறான்அவன் மேல்சீதை
பார்வையைப் பதிக்கிறாள் தன்நெஞ்சைப்
பறிகொடுக்கிறாள்.அண்ணலும் நோக்கினான்,
அவளும் நோக்கினாள்!கண்ணொடு கண் இணைகிறது.

நெஞ்சொடு நெஞ்சு அணைகிறது.உயிரோடு
உயிர் பிணைகிறது!

அச்சமயம், சீதையின்நோக்கிய நோக்கெனும்
நுதிகொள் வேல் இணைஆக்கிய மதுகையான்
தோளில் ஆழ்ந்தன.

இது போன்ற இன்னொரு காட்சியைக்
கம்பன்உலாவியற் படலத்தில் காட்டுகிறான் :

உலவி வரும் நிலவு என வீதியில்உலவி வரும்
இராமனின் அழகுநலன்களைக் காணும்சில
பெண்களின் கண்கள்அவன் தோளில் ஆழ்கின்றன.

சிலபெண்களின் கண்கள்அவன் தாளில் வீ;ழ்கின்றன.
"தோள் கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்னதாள் கண்டார்
தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே!

"கம்பனைத் தவிர வேறெந்தக்கொம்பனும் வரைய
முடியாதகாவிய வரிகள்!

மலைத்தோள் கண்டு மகளிரின் மனங்கள்
மலைத்துப் போகும்!நிலைகுலைந்த
நெஞ்சங்களோ விரகத்தில் வேகும்!
இராமனின் தோள்சேரும் பேறு சீதைக்கு
மட்டுமே என்றாலும்வாராதோ தங்களுக்கும்
அப்பேறு என்ற ஏக்கம்!விளைவு?

பதிந்த இடத்தை விட்டுநகர மறுக்கும் விழிகள் - உள்ள(த்)தைப்
பகர முடியாத மொழிகள்!புவனமே புரண்டெழுந்து
வந்தாலும் அவர்கள்கவனம் என்னவோ அவனின்
தோள் மீதுதான்!

வேறு சில பெண்களுக்கோ வேறு வகை எண்ணம் :
கல்லையும் பெண்ணாய்க் கனியவைத்தனவாமே
காகுத்தனின் கமலப் பாதங்கள் - இப்போதுதங்களையும்
அப்படிச் செய்யுமா,தங்கள் வாழ்வும் விமோசனம்
பெற்று உய்யுமா?பாவப்பட்ட பெண்கள் அங்கே
ஏகப்பட்ட எதிர்பார்ப்போடுதாள் கண்டார் தாளே கண்டார்!

தோளையும் தாளையும் தனித்தனியாய்நோக்குறும்
கன்னியர் பற்றிய வரிகள்கண்ணதாசனின் கருத்தைக்
கவர்ந்துவிடுகின்றன!

என்ன அற்புத வரி இது :
“தோள் கண்டார் தோளே கண்டார்”!
ஆகா, ஆகா என அவர் மனம் தழைகிறது!
இப்படியான அற்புத வரியைஎப்படியாவது
பயன்படுத்த விழைகிறது!படித்துச் சுவைத்து
லயித்து ரசித்த சொற்களைஅப்படியே இழைத்து
வைக்கநல்லதொரு வாய்ப்பும் வருகிறது!
திரைப் படம் : இதய கமலம்

“தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்வாள் கண்டேன் வாளே கண்டேன்வட்டமிடும் விழிகள் கண்டேன்”
தாளை வாளாக்கிக் கம்பனின்வார்த்தைகளைத்
தன் பாடலில்வார்த்தெடுக்கும் வித்தை
கண்ணதாசனுக்குக்கைவந்த கலை இல்லை,
இல்லை…கவிதை தந்த கலை!

எண்ணத்தில் எப்போதும் இனிக்கின்றவண்ணம்
பலப்பல வண்ணக் கவிதைகளைவாரி வழங்கிய
வள்ளல் கம்பன்.கைவண்ணம் கால்வண்ணம்
என்று அவன் சொன்னவண்ணம் கண்டு கேட்டு
ரசித்தகண்ணதாசனும் அவ்வண்ணமே பல
வண்ணங்களைப் போட்டுப்பாடலாக்கி நாம்
மகிழும்வண்ணம் தந்த திறமையை என்னவென்பது!

அந்தப் பாடலைப் பாhக்கும் முன் கம்பன்முந்தித் தந்த பாடலைப் பார்ப்போமா?

விசுவாமித்திரன் வேள்வியைக் குலைக்கவிசுவரூபம்
எடுத்து வருகிறாள் தாடகை என்னும் சழக்கி இறைக்கடை
துடித்த புருவமும் எயிறு என்னும்பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாயுமாக வருகிறாள் அவ்வரக்கி!

இராமனுக்கும் அவளுக்கும் கடும் போர்!இறுதியில்,
இராமன் தன்சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம்
விடுகிறான்.அறந்திறம்பிய அரக்கியின் மார்பைத்
துளைத்துப்புறம் போகிறது அந்த இராம பாணம் -
கல்லாப் புல்லர்க்கு நல்லார் சொன்ன பொருள் போல!
கரிய செம்மலாம் காகுத்தன் கன்னிப் போரில்காட்டிய
ரம் கண்டு மகிழ்ச்சி கொண்டுபெரிய முனிவனும்
அரிய படைக்கலன்களை வழங்கினான்.

பின்னர், முனிவன் முன் செல்லஅண்ணலும் அவன்
தம்பியும்பின் சென்றனர் - மிதிலை நோக்கி!
வழியில் -மேடெனக் கருங்கல்; ஒன்று கிடந்தது
இராமனின் பாதம் அதனைக் கடந்ததுகண்ட கல்
மிசை காகுத்தன் கழல் துகள் கதுவஅற்புதம் ஒன்று நிகழ்ந்தது.பெண்ணமுதாய் அது மாறி நின்றது!

அன்னையே அனையாட்கு நிகழ்ந்ததுஎன்னை என
இராமன் கேட்கிறான்.கவுதம முனிவனின்
கைப்பிடித்தவளைஅகலிகை எனும் பெயர்
படைத்தவளைவிழியால் காதல் கதை பேசி
நவ்வி போல்விழியாளை வீழ்த்திய இந்திரன்
கதையைமுனிவன் கூறக்கேட்டான்."நெஞ்சினால்
பிழைப்பு இலாள்' எனநீதித் தீர்ப்பு வழங்கிப்போட்டான.;

தாடகை வதத்தில் இராமன் தடக்கையின்
உரங்கண்டுமேடைக் கல் மாதவளாய் மாறியதில்
அவன் காலின் திறங்கண்டு;விசுவாமித்திரன்
டுகின்றான்வியப்பின் எல்லையில் நின்று"மைவண்ணத்
தரக்கி போரில் மழைவண்ணத் தண்ணலேகைவண்ணம்
அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்" என்று!

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் கம்பன் எழுதிய
அவ்வண்ணம் கண்டு ருசித்து ரசித்த கண்ணதாசன்
பாடல் ஒன்றில் முழுக்க முழுக்கவண்ணங்களாக வாரி இறைத்துவிடுகிறார்தென்னங் கள்ளாக இன்பத்தை நிறைத்துவிடுகிறார்!

பி.பி ஸ்ரீனிவாஸ், பி. சுசிலா குரல்களில் கொடிகட்டிப்
பறந்த பாடல் அது.படம் : பாசம்இதோ, கவியரசரின்
கன்னித் தமிழ் வரிகள் :
ஆண் :பால் வண்ணம் பருவம் கண்டுவேல் வண்ணம்
விழிகள் கண்டுமான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண் :கண் வண்ணம் அங்கே கண்டேன்கைவண்ணம் இங்கே கண்டேன்பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கார் வண்ண கூந்தல்தேர் வண்ண மேனி தொட்டுபூவண்ண
பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?

எப்படி, கண்ணதாசனின் கைவண்ணம் ?இல்லை,
இல்லை கவிதை வண்ணம்?
இதைப் போல, வேறு வண்ணங்களிலும் பாடல்கள்
அமைத்துள்ளார் கவிஞர்.ஆனால் அவை கம்பன்
அடியொற்றிப் பிறந்தவை அல்ல.அதனால் அவை
இங்கே இடம் பெறவில்லை.காட்டாக,கல்லைத்தான்
மண்ணைத்தான் காய்சித்தான் குடிக்கத்தான்
கற்பித்தனா என்றுபாடிய இராமச்சந்திரக்
கவிராயர் பாடலைப் போல அமைந்ததுதான்,
பாவமன்னிப்புப் படத்தில் இடம் பெற்று நம்
நெஞ்சில் நிலைத்து நின்று விட்டபாடல் :

"அத்தான், என்னத்தான் அவன் என்னைத்தான் எப்படி சொல்வேனடி..".
'பலே பாண்டியா" என்ற படத்தில் வரும்,

'அத்திக்காய் அத்திக்காய்ஆலங்காய் வெண்ணலவே..' பாடல்
எழுதக் கவிஞருக் 'கை' கொடுத்தது தனிப்பாடல்திரட்டில் வரும் "உள்ளமிளகாயோ ஒரு பேச்சுரைக்காயோ வெள்ளரிக்காயோ..."
என்றவெண்பா. இவை போன்றவற்றை இக்கட்டுரையில் வேண்டு
மென்றே கொண்டுவரவில்லை.வாய்ப்பு கிடைத்தால் பின்னொருகால் எழுதக்கூடும்.

இதுவரை பார்த்தவற்றில், அடியேன் குறிப்பிட்ட
கம்பனின் பாடல்களைப் பலரும்அறிந்திருக்கக்
கூடும். அல்லது கேள்வியாவதுபட்டிருக்கலாம்.
னி, கவிஞர்எழுதிய திரைப் பாட.ல் ஒன்றை மட்டும்
குறிப்பிடுகிறேன். அந்தப் பாடலுக்குஅடித்தளம்
அமைத்துக்கொடுத்ததே கம்பன்தான்!

வியட்நாம் வீடு என்ற படத்தில் வருகிறது.'பாலக்காட்டு
பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா...' என்ற பாடல்தான் அது.
அதில்இடம் பெறும் பரமசிவன் சக்தியை ஓர் பாதியில்
வைத்தான் அந்தபரமகுரு ரெண்டு பக்கம் தேவியை
வைத்தான்பால் கடலில் மாதவனே பக்கத்தில்
வைத்தான் - ராஜாபத்மநாபன் ராணியைத் தன்
நெஞ்சில் வைத்தான்.

என்ற இந்த வரிகளின் மூலம் கம்பனில்தான் உள்ளது!

எங்கே? எந்த இடத்தில்? யார் கூற்றாகக் கம்பன் இதனைக் கூறுகிறான்?...தேடுங்கள், கண்டடைவீர்கள்.கண்டவர்கள் விண்டிடலாம.; விண்டவர்கள் கண்டிருக்கவேண்டும்.

கண்டு பி(ப)டிக்க இரண்டு நாள்கள் போதுமா?
அதுவரைஎனக்கு ஓய்வுபிறகு தொடரும்
இந்த ஆய்வு!
அன்பன்,


பிரான்சிலிருந்துபெஞ்சமின்

No comments: