Wednesday, June 25, 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன் -(2)




தரந்தாழாமல் பரந்திருக்கும் தமிழோ பெருங்கடல்! அதில்நிரந்தரமாய்ப் பள்ளிகொண்டிருக்கும் கம்பன் காவியமோ தனிக்கடல்!
இந்தக்கம்பக் கடலில் மூழ்காதவர்களே இல்லை!
- இதில்சொம்பள்ளிக் குளித்தாலும்
சுகமாக நீந்திக் களித்தாலும்கிட்டுகின்ற
இன்பத்துக்கு எட்டுகின்ற வானமே எல்லை!
வ.வே.சு ஐயராகட்டும் டி.கே.சி முதலியாராகட்டும் வை.மு.கோ ஐயங்காராகட்டும்அறிஞர் அண்ணா துரையாகட்டும் கம்பனடிப்பொடியாகட்டும்மு.மு.இசுமாயிலாகட்டும்...ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இதில் மூழ்கியவர்கள்தாம்!தமக்குரிய விதத்தில் கம்பன் அமுதை உண்டு ரசித்தவர்கள்தாம்!
இந்த வரிசையிலே முந்திக்கொண்டுவந்து சேருகிறார் கவியரசர் கண்ணதாசன்.
பூவுக்குப் பூ தாவும் இந்தத் தேனீ,
கம்பன்பாவுக்குப் பா தாவித் தாவிச் சுவைக்கிறது.
கம்பன் தமிழில் செம்புலப் பெயல் நீராய் உருகிகம்பன் அமுதை அள்ளிப் பருகிஉள்வாங்கிய தமிழ்த் தாதுவை எல்லாம்கள்வாங்கிய திரைப்படப் பாடலாகமாற்றித் தருகிறது, கம்பனைப் பெயரிட்டு அழைத்தேபோற்றி வருகிறது! ஏனெனில்கம்பன் என்ற பெயரேகொம்புத் தேனாக இனிக்கிறது இவருக்கு!
'செந்தாழம் பூவில்' என்னும் பாட்டில்"இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வருணனை" என்கிறார் கண்ணதாசன்.
ஆலயமணியில் ஒலித்த பாடலைத்தான் எடுத்துக்கொள்ளுங்களேன் :
'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா!
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா!
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா!
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா!
எனக் கேட்டு நமக்குள்எல்லை இல்லா
இன்பம் ஊட்டும் கவிஞர்,என்ன சொல்லித் தொடர்கிறார் கேளுங்கள் :
'கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!"
சீதையெனும் தாயாகவும் சகுந்தலை எனும் சேயாகவும் தன்காதலியைக் காணும் கவிஞருக்கு யாருடையசீதையைப் பிடித்திருக்கிறது பாருங்கள்!
கம்பனின் சீதைதான் பிடித்திருக்கிறதாம்!
ஏன் தெரியுமா?
கம்பன் என்றொரு மானிடன்
'சீதை நடையழகும் சீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி
அவனைப்போட்டானாம் மதுக்குடத்தில் அள்ளி"!கண்ணதாசனின் வரிகள்-மாலைத் தென்றலாய் மனத்தை மயக்கும்மாணிக்க வரிகள்!

அவள் ஒரு மேனகை என்ற பாடலில்,
'என்ன சொல்லி என்ன பாடக்கம்பன் இல்லை கவிதை பாட' என்றும்
'அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா" என்றும்இன்னும் பல இடங்களிலும்
கம்பன் பெயரை வைத்திழைத்தேசெம்பொன்னாய் ஒளிரும் பாடல்களைப்படைத்திருக்கிறார் கண்ணதாசன்!
கம்பன் பெயரை அவர் ரசித்தமைக்குச்சான்றுகள்
அல்லவா, இவை!

No comments: