Friday, June 27, 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன்(பகுதி 3)

இதோ,கண்ணதாசன் ரசித்த கம்பன் -
கம்பீரமாய் வருகிறான்.
உண்ணத் தெவிட்டாக் கனியமுதாய்த்
தமிழமுதைத் தருகிறான்!
எங்கிருந்து தொடங்க?
கம்பன் கவிதைகள் - கட்டிக் கரும்புகள்!தொட்ட
இடமெல்லாம் சுவைப்பவைகடித்த இடமெல்லாம் -
இல்லை, இல்லைபடித்த இடமமெல்லாம் இனிப்பவை!
எங்கே தொடங்கினாலும் எங்கெங்கே தொட்டாலும்
அங்கெங்கெனாதபடி சுவை பயப்பவை!

என் சிறப்புரையில் சொல்லாத -அண்மையில்
எழுத்துக்கூடத்தில் வெளி வந்தநன்றி :சத்தியா -
நிலா முற்றம்.என்ற கட்டுரையில் இடம் பெற்ற
" காத்திருந்தேன் காத்திருந்தேன்" என்னும்பாடலில்
இருந்தே தொடங்கலாமா?
திருமதி பி சுசீலா அவர்களின் தேன் குரலில்தவழ்ந்து
வரும் தென்றலாய்க்காற்றினிலே வரும்; இந்தக்
கீதத்தில்கடைசி நான்கு வரிகளைக் குறிப்பிடும்
இதன் ஆசிரியர்,
" அடுத்து வரும் வரிகளில் (கண்ணதாசன்)இலக்கியச்
சிறப்பின் உச்சிக்கே நம்மை இழுத்துச்சென்று விடுகிறார்.

"கண் திறந்து நானிருந்தேன்கட்டழகர் குடி புகுந்தார்கண்
திறந்தால் போய் விடுவார்கண் மூடிக் காத்திருப்பேன்"....
என எழுதுகிறார்.

உண்மைதான்-கண்ணதாசனின் இந்த இலக்கியச்
சிறப்பின் உச்சிக்குவைரமணி வரிகளுக்குக்காரண
ருத்தா கம்பனின் மாணிக்க வரிகள்தாம்.இதோ,
கம்பனின் காவியம் விரிகிறதுஅதில் கண்ணதாசன்
ரசித்த இந்தப் பகுதி தெரிகிறது!வாருங்கள் வாருங்கள்,
வந்து பாருங்கள் :

கம்பன் காலம் -மூவருலா, விக்கிரம சோழனுலா...
எனஉலா இலக்கியங்கள் உலா வந்த காலம்!
தன்னேரில்லாத் தலைவன்வீதிவாய் உலா வருகிறான்.;
பேதை முதல் பேரிளம் பெண்கள்ஈறாக உள்ள
எழுபருவத்துப் பெண்கள்மாரன் கணை தொடுக்க,
தலைவனைக் காண்பதற்குவந்து குவிவார்களாம்.
இதனைநேரிசைக் கலிவெண்பாவில் பாடி முடிப்பதே
உலாவாகும்இப்புதுவகை இலக்கியத்தில்மனத்தைப்
பறிகொடுத்த கம்பன் தன்காவியத்திலும்
இதன் கூறுகளைத் தொடுகிறான்.
உலாவியற் படலம் என்றொரு சிற்றுலாவைபலாப்பழச்
சுவையோடு படைத்து உலாவ விடுகிறான்!

மிதிலை நகரிலே, தென்றல் கொடி அசைக்கச்
சீதை கரம் பிடிக்கச் சீராமன்வீதகளில் வலம்
வருகிறான்.மாவீரன் வரும்போது மலர் தூவி
வரவேற்பதுமுறை அல்லவா!
அப்படியேஇங்கும் இராமனை வரவேற்கும்
மங்கையர்கள் வெறும் மலரிட்டு வரவேற்க
வில்லையாம்!
மாநெடுங்கண் நஞ்சு சூழ் விழிகளைப் பூமழையாக
அவன் மீது தூவி வரவேற்றார்களாம்.

இராமனைக் கண்டு நிலைகுலையும்பெண்களைப்
பற்றிப் பேசும் இப்பகுதிகாதல் பெண்களின்
பெருந்தலைவன் கண்ணதாசனைக் கவர்ந்ததில்
வியப்பில்லைதான்!மான் இனம் போல, மயில் இனம்
போலமீன் இனம் போலக் குவிந்த மகளிர்
தம்மனநிலைகளை - கண்ணினால்காதல்
ன்னும் பொருளையே காணும்உடல், உள்ள
நிலைகளைப் பல பாடல்களில் கம்பன் பாடுகிறான்.

இதில் உள்ள ஒரு பாடல்இலக்கியச் சுவையின்
உச்சியாய் விளங்கும் ஒரு பாடல்கண்ணதாசனைக்
காந்தமாய்க் கவர்ந்திழுக்கிறது.கன்னித் தமிழெடுத்த
கம்பன்தன்னை மறந்து பாடும் அந்தக் காட்சி :
அங்கே-சொன்னலம் கடந்த காமச் சுவையை
ஓர் உருவம் ஆக்கிஇன்னலம் தெரியவல்ல
ஓவியன் ஒருவன் தீட்டிய ஒவியமாய் ஒருத்தி!
மைக்கருங் கூந்தல் செவ்வாய் வாள்நுதல்
கொண்ட அவள்உலா வரும் இராமனின்
அழகு நலமெலாம் கண்டுகண்டுநெக்கனள்;,
உருகினள்...பக்கத்தே நிற்கும் தோழியிடம் மறுகினள் :
"நெஞ்சிடை வஞ்சன் வந்துபுக்கனன் போகாவண்ணம்
கண்எனும் புலங்கொள் வாயில்சிக்கென அடைத்தேன்
தோழி சேருதும் அமளி என்றாள்".

கம்பனின் இக்காவிய வரிகளைக் கண்ணதாசன்
தனக்குச்சொந்தமாக்கிக் களிக்கிறார். தனக்கே
உரியசெந்தமிழில் திரைப் பாடலாக்கி அளிக்கிறார்:

"கண் திறந்து நானிருந்தேன்கட்டழகர் குடி
புகுந்தார்கண் திறந்தால் போய் விடுவார்கண்
மூடிக் காத்திருப்பேன்"....
கம்பனின் வரிகளை ரசித்தவர் அவற்றில்
லயித்தவர்அவற்றையே தமதாக மாற்றிநமக்குள்
தமிழ்த் தேனை ஊற்றிஅவர் வரிகளில் நம்மை
லயிக்கவும் ரசிக்கவும் செய்துவிடுகிறார் நம்
மனங்களை எல்லாம் கொய்துவிடுகிறார்
கவியரசர் பட்டத்தை எய்துவிடுகிறார்.
பிரான்சிலிருந்து

பெஞ்சமின்.

No comments: