Wednesday, June 25, 2008

'கண்ணதாசன்ரசித்த கம்பன்'


கடந்த ஞாயிறு 22 06 08 அன்று இங்கே பிரான்சு நாட்டில் மோ என்ற நகரில்அவர் பிறந்த நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தோம்.
அந்தநகரில் தான்'பிரான்சுக் கண்ணதாசன் கழகம்'என்ற ஒன்றை நண்பர் சிவப்பிரகாசம் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக்கொண்டாடி வருகிறார்.
இந்த ஆண்டு 4ஆம் ஆண்டு. அவ்விழாவில் 'கண்ணதாசன்ரசித்த கம்பன்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற அடியேன்அழைக்கப்பட்டிருந்தேன். கவிஞர் கி.பாரதிதாசன் தலைமையில் பட்டி மன்றம்ஒன்று நடைபெற்றது. கவிஞர் கண்ணதாசனின் திரைப் படப்பாடல்கள் நின்றுநிலைப்பதற்குக் காரணம்கருத்தழகே என்று மகளிர் மூவர் (திருமதிகள் ஆதலட்சுமி வேணுகோபால்,தனசெல்வி தம்பி, பூங்குழலி பெருமாள்) வாதிட்டனர். சொல்லழகே என்ற அணியில்நின்றுஎதிர்வாதம் செய்த மங்கையர்கள் : திருமதிகள் சரோசா தேவராசு,பிரகதீசுவரி சிவப்பிரகாசம், ராசி சிமோன். இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமேமக்களைப் பெரிதும் கவர்ந்தன.
எளியேன் சிறப்புரையிலிருந்துசில பகுதிகள் உங்கள் பார்வைக்கு :
கண்ணதாசன் ரசித்த கம்பன்(பகுதி 1)(பிரான்சுக் கண்ணதாசன் கழகம பரி நகரின் (Paris) புற நகராம் மோ என்னும்பெரு நகரில் 22ஃ06ஃ08 ஞாயிறு அன்று கவியரசர் கண்ணதாசன் விழாவைச்சிறப்பாகக் கொண்டாடியது. அவ்விழாவில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ ஆற்றியசிறப்புரை.)
வானிலே வலம் வரும் ஆதவனுக்குஅறிமுகம் தேவை இல்லை!இரவிலே உலா வரும் நிலாவுக்கும்அறிமுகம் தேவை இல்லை!தமிழ்க் கவிதை வானிலே ஆதவனாய்த்தமிழ்த் திரை உலகின் மாதவனாய்த்;திகழ்ந்த கவியரசர் கண்ணதாசனுக்கும் அப்படியே!ஏனெனில்,கண்ணதாசன் -காவியத் தாயின் இளைய மகன்,காதற் பெண்களின் பெருந்தலைவன்!அவன் நிரந்தரமானவன், அழிவதில்லை!எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை!கால் போட்ட மதுவிலும் கால் நீக்கிய மாதுவிலும் வழுக்கி வீழ்ந்தவன்!மனத்தை மயக்கும் கவிதைகளைச் செதுக்கி வாழ்ந்தவன்!
அந்தக்கண்ணதாசன் திரைப்படத் துறையில்கால் பதித்த காலத்தில்; திரைப் பாடல்களில்பக்திச் சுவையைப் புகுத்தி இருந்தார்,பாபநாசம் சிவன்.முத்து முத்தான கருத்துகளைச்சினிமாப் பாடல்களில் பொருத்தி இருந்தார்பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம்..இந்தச் சூழலில் வெள்ளித் திரை வானிலே ஒளிவீச வந்தஇக்கவிஞன்,தான் படித்துச் சுவைத்திருந்தபைந்தமிழ் இலக்கியங்களை,வைரமாய் ஒளி வீசும் இலக்கிய வரிகளை,கருத்துக் கருவூலங்களைத்தன் பாடலில் இழுத்து வந்து இழைத்து வைத்தான்.பாமர மக்களையும் அவற்றைச் சுவைக்க வைத்தான.;
பரந்த கடல் மேல் பரவும் மேகம் அதன்நீரை தனக்குள் இழுத்துக்கொள்கிறது.பிறகு நீராக உள் வாங்கியதை மழையாகப் பொழிகிறது.அதைப் போலத்தான்கண்ணதாசன் என்னும் மேகம்தமிழாகிய கடலில் தான் உட்கொண்டவற்றைத்தன் பாடல் வரிகளில்எளிய மொழியில் மழையாகப்பொழிந்து தள்ளுகிறது.
எடுத்துக்காட்டாக,இப்பாடலைப் பாருங்களேன் , பாடிப் பாருங்களேன்
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே வழியம்பு ஒழுகமெத்திய மாதரும் வீதி மட்டே விம்மிவிம்மி இருகைத்தல மேல் வைத்தழு மைந்தரும் சுடுகாடு மட்டேபற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே!"
பாட முடிகிறதா,பாடினாலும் பொருள் புரிகிறதா...புரிந்தாலும் உள்ளத்துக்குள் புகுகுகின்றதா!படித்திருக்கும் உங்களுக்குப் புரிந்தாலும்ஏட்டையே தொட்டிராதஏழைகளுக்கு இதில் ஓரெழுத்தாவது புரியுமா!
பட்டினத்தார் பாடல்களுள் ஒன்று இது!அவர் பாடல்களும் கடல்தான்!அந்தக் கடல் மேல் பரந்து திரிந்து மனத்தைப் பறிகொடுத்தகண்ணதாசன் என்னும் மேகம், இந்தப் பாடலைத் தனக்குள் ஈர்த்துக்கொள்கிறது.மூலக்கருத்து சிதையாமல்பாலொடு தேன் கலந்தது போல்பொருத்தமான சொற்களால்மழையாகப் பொழிவதைக் கேளுங்கள் :
வீடுவரை உறவுவீதி வரை மனைவிகாடுவரை பிள்ளைகடைசி வரை யாரோ!
கல்லாத நல்லவர்களின் கவனத்தையும் ஈர்க்கின்ற வரிகள்!படியாத பாமரர்க்கும் புரிகின்ற மொழிகள்!இதுதான்கண்ணதாசன்!
இலக்கிய வரிகளை, கருத்துகளைத்தன் திரைப்படப் பாடல்களில்கலக்கிக் கொடுத்த கண்ணதாசனுக்குக்கம்பன் மேல் தணியாத காதல்!கம்பன் மேல் கரைகடந்தகாதல் கொள்ளாதகவிஞன் எவனுண்டு!
கம்பனைப் பாட வரும்கண்ணதாசன்,'பத்தாயிரம் கவிதைகளை முத்தாக அள்ளிவைத்த கம்பனுக்கு ஈடு - இன்னும்வித்தாகவில்லை என்றே நீ பாடு'என்று பாடுகிறான்!

No comments: