Sunday, June 29, 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன் - (பகுதி 4)

ம்பன் காட்டும் கன்னிகண்ணுள் நுழைந்த
கள்வனைக் கண்ணால் சிறைசெய்துநெஞ்சச்
சிறையில் அடைத்துவிட்டதோடு நிற்கவில்லை
அந்தப்பஞ்சவண்ணக் கிளி!தன்னையும்
அவனையும் பள்ளி அறையில் கொண்டு
போய்ச்சேர்க்கும்படித் தோழியை வேண்டுகிறாள்.

கண்ணதாசனின் கன்னியோகண்மூடிக் காத்திருப்பேன்
எனக் காத்திருக்கிறாள்.அவனுக்காகவே அவள்
பூத்திருக்கிறாள்.

கம்பனின் உலாவியற் படலத்தில்இது போலப்
பல பாடல்கள்இலக்கிய உலகின் இன்ப உச்சிக்குக்
இட்டுச்செல்லும்இனிய ஆடல்கள்!

பருவப் பெண்கள்இராமனின் அழகு நலன்களை
எல்லாம்பகுதிபகுதியாகப் பாhத்துப் பார்த்துப்
பருகுகிறார்கள்!திருமேனி அழகைத் தீண்ட
முடியாமல் உருகுகிறார்கள்!
உதித்த சூரியனாய் உலா வரும் அவன்
மேனியில்பதித்த இடத்திலிருந்து பார்வையை
மீட்க முடியவில்லையாம்!வாள்கண் நங்கையர்
தம் கண்கள்ஆடவர்கள் மேல் முதலில் பாயும்
இடம்தோள்களாம்! பல இடங்களில்கம்பன் சொல்கிறான்.
(ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்'என்று
கம்பன் கூறுவதைக் கவனத்தில கொள்க!)

பாதையோடு செல்லும் முனிவனின் பின்னால்
இராமன் செல்கிறான்அவன் மேல்சீதை
பார்வையைப் பதிக்கிறாள் தன்நெஞ்சைப்
பறிகொடுக்கிறாள்.அண்ணலும் நோக்கினான்,
அவளும் நோக்கினாள்!கண்ணொடு கண் இணைகிறது.

நெஞ்சொடு நெஞ்சு அணைகிறது.உயிரோடு
உயிர் பிணைகிறது!

அச்சமயம், சீதையின்நோக்கிய நோக்கெனும்
நுதிகொள் வேல் இணைஆக்கிய மதுகையான்
தோளில் ஆழ்ந்தன.

இது போன்ற இன்னொரு காட்சியைக்
கம்பன்உலாவியற் படலத்தில் காட்டுகிறான் :

உலவி வரும் நிலவு என வீதியில்உலவி வரும்
இராமனின் அழகுநலன்களைக் காணும்சில
பெண்களின் கண்கள்அவன் தோளில் ஆழ்கின்றன.

சிலபெண்களின் கண்கள்அவன் தாளில் வீ;ழ்கின்றன.
"தோள் கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்னதாள் கண்டார்
தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே!

"கம்பனைத் தவிர வேறெந்தக்கொம்பனும் வரைய
முடியாதகாவிய வரிகள்!

மலைத்தோள் கண்டு மகளிரின் மனங்கள்
மலைத்துப் போகும்!நிலைகுலைந்த
நெஞ்சங்களோ விரகத்தில் வேகும்!
இராமனின் தோள்சேரும் பேறு சீதைக்கு
மட்டுமே என்றாலும்வாராதோ தங்களுக்கும்
அப்பேறு என்ற ஏக்கம்!விளைவு?

பதிந்த இடத்தை விட்டுநகர மறுக்கும் விழிகள் - உள்ள(த்)தைப்
பகர முடியாத மொழிகள்!புவனமே புரண்டெழுந்து
வந்தாலும் அவர்கள்கவனம் என்னவோ அவனின்
தோள் மீதுதான்!

வேறு சில பெண்களுக்கோ வேறு வகை எண்ணம் :
கல்லையும் பெண்ணாய்க் கனியவைத்தனவாமே
காகுத்தனின் கமலப் பாதங்கள் - இப்போதுதங்களையும்
அப்படிச் செய்யுமா,தங்கள் வாழ்வும் விமோசனம்
பெற்று உய்யுமா?பாவப்பட்ட பெண்கள் அங்கே
ஏகப்பட்ட எதிர்பார்ப்போடுதாள் கண்டார் தாளே கண்டார்!

தோளையும் தாளையும் தனித்தனியாய்நோக்குறும்
கன்னியர் பற்றிய வரிகள்கண்ணதாசனின் கருத்தைக்
கவர்ந்துவிடுகின்றன!

என்ன அற்புத வரி இது :
“தோள் கண்டார் தோளே கண்டார்”!
ஆகா, ஆகா என அவர் மனம் தழைகிறது!
இப்படியான அற்புத வரியைஎப்படியாவது
பயன்படுத்த விழைகிறது!படித்துச் சுவைத்து
லயித்து ரசித்த சொற்களைஅப்படியே இழைத்து
வைக்கநல்லதொரு வாய்ப்பும் வருகிறது!
திரைப் படம் : இதய கமலம்

“தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்வாள் கண்டேன் வாளே கண்டேன்வட்டமிடும் விழிகள் கண்டேன்”
தாளை வாளாக்கிக் கம்பனின்வார்த்தைகளைத்
தன் பாடலில்வார்த்தெடுக்கும் வித்தை
கண்ணதாசனுக்குக்கைவந்த கலை இல்லை,
இல்லை…கவிதை தந்த கலை!

எண்ணத்தில் எப்போதும் இனிக்கின்றவண்ணம்
பலப்பல வண்ணக் கவிதைகளைவாரி வழங்கிய
வள்ளல் கம்பன்.கைவண்ணம் கால்வண்ணம்
என்று அவன் சொன்னவண்ணம் கண்டு கேட்டு
ரசித்தகண்ணதாசனும் அவ்வண்ணமே பல
வண்ணங்களைப் போட்டுப்பாடலாக்கி நாம்
மகிழும்வண்ணம் தந்த திறமையை என்னவென்பது!

அந்தப் பாடலைப் பாhக்கும் முன் கம்பன்முந்தித் தந்த பாடலைப் பார்ப்போமா?

விசுவாமித்திரன் வேள்வியைக் குலைக்கவிசுவரூபம்
எடுத்து வருகிறாள் தாடகை என்னும் சழக்கி இறைக்கடை
துடித்த புருவமும் எயிறு என்னும்பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாயுமாக வருகிறாள் அவ்வரக்கி!

இராமனுக்கும் அவளுக்கும் கடும் போர்!இறுதியில்,
இராமன் தன்சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம்
விடுகிறான்.அறந்திறம்பிய அரக்கியின் மார்பைத்
துளைத்துப்புறம் போகிறது அந்த இராம பாணம் -
கல்லாப் புல்லர்க்கு நல்லார் சொன்ன பொருள் போல!
கரிய செம்மலாம் காகுத்தன் கன்னிப் போரில்காட்டிய
ரம் கண்டு மகிழ்ச்சி கொண்டுபெரிய முனிவனும்
அரிய படைக்கலன்களை வழங்கினான்.

பின்னர், முனிவன் முன் செல்லஅண்ணலும் அவன்
தம்பியும்பின் சென்றனர் - மிதிலை நோக்கி!
வழியில் -மேடெனக் கருங்கல்; ஒன்று கிடந்தது
இராமனின் பாதம் அதனைக் கடந்ததுகண்ட கல்
மிசை காகுத்தன் கழல் துகள் கதுவஅற்புதம் ஒன்று நிகழ்ந்தது.பெண்ணமுதாய் அது மாறி நின்றது!

அன்னையே அனையாட்கு நிகழ்ந்ததுஎன்னை என
இராமன் கேட்கிறான்.கவுதம முனிவனின்
கைப்பிடித்தவளைஅகலிகை எனும் பெயர்
படைத்தவளைவிழியால் காதல் கதை பேசி
நவ்வி போல்விழியாளை வீழ்த்திய இந்திரன்
கதையைமுனிவன் கூறக்கேட்டான்."நெஞ்சினால்
பிழைப்பு இலாள்' எனநீதித் தீர்ப்பு வழங்கிப்போட்டான.;

தாடகை வதத்தில் இராமன் தடக்கையின்
உரங்கண்டுமேடைக் கல் மாதவளாய் மாறியதில்
அவன் காலின் திறங்கண்டு;விசுவாமித்திரன்
டுகின்றான்வியப்பின் எல்லையில் நின்று"மைவண்ணத்
தரக்கி போரில் மழைவண்ணத் தண்ணலேகைவண்ணம்
அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்" என்று!

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் கம்பன் எழுதிய
அவ்வண்ணம் கண்டு ருசித்து ரசித்த கண்ணதாசன்
பாடல் ஒன்றில் முழுக்க முழுக்கவண்ணங்களாக வாரி இறைத்துவிடுகிறார்தென்னங் கள்ளாக இன்பத்தை நிறைத்துவிடுகிறார்!

பி.பி ஸ்ரீனிவாஸ், பி. சுசிலா குரல்களில் கொடிகட்டிப்
பறந்த பாடல் அது.படம் : பாசம்இதோ, கவியரசரின்
கன்னித் தமிழ் வரிகள் :
ஆண் :பால் வண்ணம் பருவம் கண்டுவேல் வண்ணம்
விழிகள் கண்டுமான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண் :கண் வண்ணம் அங்கே கண்டேன்கைவண்ணம் இங்கே கண்டேன்பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கார் வண்ண கூந்தல்தேர் வண்ண மேனி தொட்டுபூவண்ண
பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?

எப்படி, கண்ணதாசனின் கைவண்ணம் ?இல்லை,
இல்லை கவிதை வண்ணம்?
இதைப் போல, வேறு வண்ணங்களிலும் பாடல்கள்
அமைத்துள்ளார் கவிஞர்.ஆனால் அவை கம்பன்
அடியொற்றிப் பிறந்தவை அல்ல.அதனால் அவை
இங்கே இடம் பெறவில்லை.காட்டாக,கல்லைத்தான்
மண்ணைத்தான் காய்சித்தான் குடிக்கத்தான்
கற்பித்தனா என்றுபாடிய இராமச்சந்திரக்
கவிராயர் பாடலைப் போல அமைந்ததுதான்,
பாவமன்னிப்புப் படத்தில் இடம் பெற்று நம்
நெஞ்சில் நிலைத்து நின்று விட்டபாடல் :

"அத்தான், என்னத்தான் அவன் என்னைத்தான் எப்படி சொல்வேனடி..".
'பலே பாண்டியா" என்ற படத்தில் வரும்,

'அத்திக்காய் அத்திக்காய்ஆலங்காய் வெண்ணலவே..' பாடல்
எழுதக் கவிஞருக் 'கை' கொடுத்தது தனிப்பாடல்திரட்டில் வரும் "உள்ளமிளகாயோ ஒரு பேச்சுரைக்காயோ வெள்ளரிக்காயோ..."
என்றவெண்பா. இவை போன்றவற்றை இக்கட்டுரையில் வேண்டு
மென்றே கொண்டுவரவில்லை.வாய்ப்பு கிடைத்தால் பின்னொருகால் எழுதக்கூடும்.

இதுவரை பார்த்தவற்றில், அடியேன் குறிப்பிட்ட
கம்பனின் பாடல்களைப் பலரும்அறிந்திருக்கக்
கூடும். அல்லது கேள்வியாவதுபட்டிருக்கலாம்.
னி, கவிஞர்எழுதிய திரைப் பாட.ல் ஒன்றை மட்டும்
குறிப்பிடுகிறேன். அந்தப் பாடலுக்குஅடித்தளம்
அமைத்துக்கொடுத்ததே கம்பன்தான்!

வியட்நாம் வீடு என்ற படத்தில் வருகிறது.'பாலக்காட்டு
பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா...' என்ற பாடல்தான் அது.
அதில்இடம் பெறும் பரமசிவன் சக்தியை ஓர் பாதியில்
வைத்தான் அந்தபரமகுரு ரெண்டு பக்கம் தேவியை
வைத்தான்பால் கடலில் மாதவனே பக்கத்தில்
வைத்தான் - ராஜாபத்மநாபன் ராணியைத் தன்
நெஞ்சில் வைத்தான்.

என்ற இந்த வரிகளின் மூலம் கம்பனில்தான் உள்ளது!

எங்கே? எந்த இடத்தில்? யார் கூற்றாகக் கம்பன் இதனைக் கூறுகிறான்?...தேடுங்கள், கண்டடைவீர்கள்.கண்டவர்கள் விண்டிடலாம.; விண்டவர்கள் கண்டிருக்கவேண்டும்.

கண்டு பி(ப)டிக்க இரண்டு நாள்கள் போதுமா?
அதுவரைஎனக்கு ஓய்வுபிறகு தொடரும்
இந்த ஆய்வு!
அன்பன்,


பிரான்சிலிருந்துபெஞ்சமின்

Friday, June 27, 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன்(பகுதி 3)

இதோ,கண்ணதாசன் ரசித்த கம்பன் -
கம்பீரமாய் வருகிறான்.
உண்ணத் தெவிட்டாக் கனியமுதாய்த்
தமிழமுதைத் தருகிறான்!
எங்கிருந்து தொடங்க?
கம்பன் கவிதைகள் - கட்டிக் கரும்புகள்!தொட்ட
இடமெல்லாம் சுவைப்பவைகடித்த இடமெல்லாம் -
இல்லை, இல்லைபடித்த இடமமெல்லாம் இனிப்பவை!
எங்கே தொடங்கினாலும் எங்கெங்கே தொட்டாலும்
அங்கெங்கெனாதபடி சுவை பயப்பவை!

என் சிறப்புரையில் சொல்லாத -அண்மையில்
எழுத்துக்கூடத்தில் வெளி வந்தநன்றி :சத்தியா -
நிலா முற்றம்.என்ற கட்டுரையில் இடம் பெற்ற
" காத்திருந்தேன் காத்திருந்தேன்" என்னும்பாடலில்
இருந்தே தொடங்கலாமா?
திருமதி பி சுசீலா அவர்களின் தேன் குரலில்தவழ்ந்து
வரும் தென்றலாய்க்காற்றினிலே வரும்; இந்தக்
கீதத்தில்கடைசி நான்கு வரிகளைக் குறிப்பிடும்
இதன் ஆசிரியர்,
" அடுத்து வரும் வரிகளில் (கண்ணதாசன்)இலக்கியச்
சிறப்பின் உச்சிக்கே நம்மை இழுத்துச்சென்று விடுகிறார்.

"கண் திறந்து நானிருந்தேன்கட்டழகர் குடி புகுந்தார்கண்
திறந்தால் போய் விடுவார்கண் மூடிக் காத்திருப்பேன்"....
என எழுதுகிறார்.

உண்மைதான்-கண்ணதாசனின் இந்த இலக்கியச்
சிறப்பின் உச்சிக்குவைரமணி வரிகளுக்குக்காரண
ருத்தா கம்பனின் மாணிக்க வரிகள்தாம்.இதோ,
கம்பனின் காவியம் விரிகிறதுஅதில் கண்ணதாசன்
ரசித்த இந்தப் பகுதி தெரிகிறது!வாருங்கள் வாருங்கள்,
வந்து பாருங்கள் :

கம்பன் காலம் -மூவருலா, விக்கிரம சோழனுலா...
எனஉலா இலக்கியங்கள் உலா வந்த காலம்!
தன்னேரில்லாத் தலைவன்வீதிவாய் உலா வருகிறான்.;
பேதை முதல் பேரிளம் பெண்கள்ஈறாக உள்ள
எழுபருவத்துப் பெண்கள்மாரன் கணை தொடுக்க,
தலைவனைக் காண்பதற்குவந்து குவிவார்களாம்.
இதனைநேரிசைக் கலிவெண்பாவில் பாடி முடிப்பதே
உலாவாகும்இப்புதுவகை இலக்கியத்தில்மனத்தைப்
பறிகொடுத்த கம்பன் தன்காவியத்திலும்
இதன் கூறுகளைத் தொடுகிறான்.
உலாவியற் படலம் என்றொரு சிற்றுலாவைபலாப்பழச்
சுவையோடு படைத்து உலாவ விடுகிறான்!

மிதிலை நகரிலே, தென்றல் கொடி அசைக்கச்
சீதை கரம் பிடிக்கச் சீராமன்வீதகளில் வலம்
வருகிறான்.மாவீரன் வரும்போது மலர் தூவி
வரவேற்பதுமுறை அல்லவா!
அப்படியேஇங்கும் இராமனை வரவேற்கும்
மங்கையர்கள் வெறும் மலரிட்டு வரவேற்க
வில்லையாம்!
மாநெடுங்கண் நஞ்சு சூழ் விழிகளைப் பூமழையாக
அவன் மீது தூவி வரவேற்றார்களாம்.

இராமனைக் கண்டு நிலைகுலையும்பெண்களைப்
பற்றிப் பேசும் இப்பகுதிகாதல் பெண்களின்
பெருந்தலைவன் கண்ணதாசனைக் கவர்ந்ததில்
வியப்பில்லைதான்!மான் இனம் போல, மயில் இனம்
போலமீன் இனம் போலக் குவிந்த மகளிர்
தம்மனநிலைகளை - கண்ணினால்காதல்
ன்னும் பொருளையே காணும்உடல், உள்ள
நிலைகளைப் பல பாடல்களில் கம்பன் பாடுகிறான்.

இதில் உள்ள ஒரு பாடல்இலக்கியச் சுவையின்
உச்சியாய் விளங்கும் ஒரு பாடல்கண்ணதாசனைக்
காந்தமாய்க் கவர்ந்திழுக்கிறது.கன்னித் தமிழெடுத்த
கம்பன்தன்னை மறந்து பாடும் அந்தக் காட்சி :
அங்கே-சொன்னலம் கடந்த காமச் சுவையை
ஓர் உருவம் ஆக்கிஇன்னலம் தெரியவல்ல
ஓவியன் ஒருவன் தீட்டிய ஒவியமாய் ஒருத்தி!
மைக்கருங் கூந்தல் செவ்வாய் வாள்நுதல்
கொண்ட அவள்உலா வரும் இராமனின்
அழகு நலமெலாம் கண்டுகண்டுநெக்கனள்;,
உருகினள்...பக்கத்தே நிற்கும் தோழியிடம் மறுகினள் :
"நெஞ்சிடை வஞ்சன் வந்துபுக்கனன் போகாவண்ணம்
கண்எனும் புலங்கொள் வாயில்சிக்கென அடைத்தேன்
தோழி சேருதும் அமளி என்றாள்".

கம்பனின் இக்காவிய வரிகளைக் கண்ணதாசன்
தனக்குச்சொந்தமாக்கிக் களிக்கிறார். தனக்கே
உரியசெந்தமிழில் திரைப் பாடலாக்கி அளிக்கிறார்:

"கண் திறந்து நானிருந்தேன்கட்டழகர் குடி
புகுந்தார்கண் திறந்தால் போய் விடுவார்கண்
மூடிக் காத்திருப்பேன்"....
கம்பனின் வரிகளை ரசித்தவர் அவற்றில்
லயித்தவர்அவற்றையே தமதாக மாற்றிநமக்குள்
தமிழ்த் தேனை ஊற்றிஅவர் வரிகளில் நம்மை
லயிக்கவும் ரசிக்கவும் செய்துவிடுகிறார் நம்
மனங்களை எல்லாம் கொய்துவிடுகிறார்
கவியரசர் பட்டத்தை எய்துவிடுகிறார்.
பிரான்சிலிருந்து

பெஞ்சமின்.

Wednesday, June 25, 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன் -(2)




தரந்தாழாமல் பரந்திருக்கும் தமிழோ பெருங்கடல்! அதில்நிரந்தரமாய்ப் பள்ளிகொண்டிருக்கும் கம்பன் காவியமோ தனிக்கடல்!
இந்தக்கம்பக் கடலில் மூழ்காதவர்களே இல்லை!
- இதில்சொம்பள்ளிக் குளித்தாலும்
சுகமாக நீந்திக் களித்தாலும்கிட்டுகின்ற
இன்பத்துக்கு எட்டுகின்ற வானமே எல்லை!
வ.வே.சு ஐயராகட்டும் டி.கே.சி முதலியாராகட்டும் வை.மு.கோ ஐயங்காராகட்டும்அறிஞர் அண்ணா துரையாகட்டும் கம்பனடிப்பொடியாகட்டும்மு.மு.இசுமாயிலாகட்டும்...ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இதில் மூழ்கியவர்கள்தாம்!தமக்குரிய விதத்தில் கம்பன் அமுதை உண்டு ரசித்தவர்கள்தாம்!
இந்த வரிசையிலே முந்திக்கொண்டுவந்து சேருகிறார் கவியரசர் கண்ணதாசன்.
பூவுக்குப் பூ தாவும் இந்தத் தேனீ,
கம்பன்பாவுக்குப் பா தாவித் தாவிச் சுவைக்கிறது.
கம்பன் தமிழில் செம்புலப் பெயல் நீராய் உருகிகம்பன் அமுதை அள்ளிப் பருகிஉள்வாங்கிய தமிழ்த் தாதுவை எல்லாம்கள்வாங்கிய திரைப்படப் பாடலாகமாற்றித் தருகிறது, கம்பனைப் பெயரிட்டு அழைத்தேபோற்றி வருகிறது! ஏனெனில்கம்பன் என்ற பெயரேகொம்புத் தேனாக இனிக்கிறது இவருக்கு!
'செந்தாழம் பூவில்' என்னும் பாட்டில்"இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வருணனை" என்கிறார் கண்ணதாசன்.
ஆலயமணியில் ஒலித்த பாடலைத்தான் எடுத்துக்கொள்ளுங்களேன் :
'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா!
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா!
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா!
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா!
எனக் கேட்டு நமக்குள்எல்லை இல்லா
இன்பம் ஊட்டும் கவிஞர்,என்ன சொல்லித் தொடர்கிறார் கேளுங்கள் :
'கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!"
சீதையெனும் தாயாகவும் சகுந்தலை எனும் சேயாகவும் தன்காதலியைக் காணும் கவிஞருக்கு யாருடையசீதையைப் பிடித்திருக்கிறது பாருங்கள்!
கம்பனின் சீதைதான் பிடித்திருக்கிறதாம்!
ஏன் தெரியுமா?
கம்பன் என்றொரு மானிடன்
'சீதை நடையழகும் சீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி
அவனைப்போட்டானாம் மதுக்குடத்தில் அள்ளி"!கண்ணதாசனின் வரிகள்-மாலைத் தென்றலாய் மனத்தை மயக்கும்மாணிக்க வரிகள்!

அவள் ஒரு மேனகை என்ற பாடலில்,
'என்ன சொல்லி என்ன பாடக்கம்பன் இல்லை கவிதை பாட' என்றும்
'அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா" என்றும்இன்னும் பல இடங்களிலும்
கம்பன் பெயரை வைத்திழைத்தேசெம்பொன்னாய் ஒளிரும் பாடல்களைப்படைத்திருக்கிறார் கண்ணதாசன்!
கம்பன் பெயரை அவர் ரசித்தமைக்குச்சான்றுகள்
அல்லவா, இவை!

'கண்ணதாசன்ரசித்த கம்பன்'


கடந்த ஞாயிறு 22 06 08 அன்று இங்கே பிரான்சு நாட்டில் மோ என்ற நகரில்அவர் பிறந்த நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தோம்.
அந்தநகரில் தான்'பிரான்சுக் கண்ணதாசன் கழகம்'என்ற ஒன்றை நண்பர் சிவப்பிரகாசம் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக்கொண்டாடி வருகிறார்.
இந்த ஆண்டு 4ஆம் ஆண்டு. அவ்விழாவில் 'கண்ணதாசன்ரசித்த கம்பன்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற அடியேன்அழைக்கப்பட்டிருந்தேன். கவிஞர் கி.பாரதிதாசன் தலைமையில் பட்டி மன்றம்ஒன்று நடைபெற்றது. கவிஞர் கண்ணதாசனின் திரைப் படப்பாடல்கள் நின்றுநிலைப்பதற்குக் காரணம்கருத்தழகே என்று மகளிர் மூவர் (திருமதிகள் ஆதலட்சுமி வேணுகோபால்,தனசெல்வி தம்பி, பூங்குழலி பெருமாள்) வாதிட்டனர். சொல்லழகே என்ற அணியில்நின்றுஎதிர்வாதம் செய்த மங்கையர்கள் : திருமதிகள் சரோசா தேவராசு,பிரகதீசுவரி சிவப்பிரகாசம், ராசி சிமோன். இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமேமக்களைப் பெரிதும் கவர்ந்தன.
எளியேன் சிறப்புரையிலிருந்துசில பகுதிகள் உங்கள் பார்வைக்கு :
கண்ணதாசன் ரசித்த கம்பன்(பகுதி 1)(பிரான்சுக் கண்ணதாசன் கழகம பரி நகரின் (Paris) புற நகராம் மோ என்னும்பெரு நகரில் 22ஃ06ஃ08 ஞாயிறு அன்று கவியரசர் கண்ணதாசன் விழாவைச்சிறப்பாகக் கொண்டாடியது. அவ்விழாவில் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ ஆற்றியசிறப்புரை.)
வானிலே வலம் வரும் ஆதவனுக்குஅறிமுகம் தேவை இல்லை!இரவிலே உலா வரும் நிலாவுக்கும்அறிமுகம் தேவை இல்லை!தமிழ்க் கவிதை வானிலே ஆதவனாய்த்தமிழ்த் திரை உலகின் மாதவனாய்த்;திகழ்ந்த கவியரசர் கண்ணதாசனுக்கும் அப்படியே!ஏனெனில்,கண்ணதாசன் -காவியத் தாயின் இளைய மகன்,காதற் பெண்களின் பெருந்தலைவன்!அவன் நிரந்தரமானவன், அழிவதில்லை!எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை!கால் போட்ட மதுவிலும் கால் நீக்கிய மாதுவிலும் வழுக்கி வீழ்ந்தவன்!மனத்தை மயக்கும் கவிதைகளைச் செதுக்கி வாழ்ந்தவன்!
அந்தக்கண்ணதாசன் திரைப்படத் துறையில்கால் பதித்த காலத்தில்; திரைப் பாடல்களில்பக்திச் சுவையைப் புகுத்தி இருந்தார்,பாபநாசம் சிவன்.முத்து முத்தான கருத்துகளைச்சினிமாப் பாடல்களில் பொருத்தி இருந்தார்பட்டுக் கோட்டை கலியாண சுந்தரம்..இந்தச் சூழலில் வெள்ளித் திரை வானிலே ஒளிவீச வந்தஇக்கவிஞன்,தான் படித்துச் சுவைத்திருந்தபைந்தமிழ் இலக்கியங்களை,வைரமாய் ஒளி வீசும் இலக்கிய வரிகளை,கருத்துக் கருவூலங்களைத்தன் பாடலில் இழுத்து வந்து இழைத்து வைத்தான்.பாமர மக்களையும் அவற்றைச் சுவைக்க வைத்தான.;
பரந்த கடல் மேல் பரவும் மேகம் அதன்நீரை தனக்குள் இழுத்துக்கொள்கிறது.பிறகு நீராக உள் வாங்கியதை மழையாகப் பொழிகிறது.அதைப் போலத்தான்கண்ணதாசன் என்னும் மேகம்தமிழாகிய கடலில் தான் உட்கொண்டவற்றைத்தன் பாடல் வரிகளில்எளிய மொழியில் மழையாகப்பொழிந்து தள்ளுகிறது.
எடுத்துக்காட்டாக,இப்பாடலைப் பாருங்களேன் , பாடிப் பாருங்களேன்
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே வழியம்பு ஒழுகமெத்திய மாதரும் வீதி மட்டே விம்மிவிம்மி இருகைத்தல மேல் வைத்தழு மைந்தரும் சுடுகாடு மட்டேபற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே!"
பாட முடிகிறதா,பாடினாலும் பொருள் புரிகிறதா...புரிந்தாலும் உள்ளத்துக்குள் புகுகுகின்றதா!படித்திருக்கும் உங்களுக்குப் புரிந்தாலும்ஏட்டையே தொட்டிராதஏழைகளுக்கு இதில் ஓரெழுத்தாவது புரியுமா!
பட்டினத்தார் பாடல்களுள் ஒன்று இது!அவர் பாடல்களும் கடல்தான்!அந்தக் கடல் மேல் பரந்து திரிந்து மனத்தைப் பறிகொடுத்தகண்ணதாசன் என்னும் மேகம், இந்தப் பாடலைத் தனக்குள் ஈர்த்துக்கொள்கிறது.மூலக்கருத்து சிதையாமல்பாலொடு தேன் கலந்தது போல்பொருத்தமான சொற்களால்மழையாகப் பொழிவதைக் கேளுங்கள் :
வீடுவரை உறவுவீதி வரை மனைவிகாடுவரை பிள்ளைகடைசி வரை யாரோ!
கல்லாத நல்லவர்களின் கவனத்தையும் ஈர்க்கின்ற வரிகள்!படியாத பாமரர்க்கும் புரிகின்ற மொழிகள்!இதுதான்கண்ணதாசன்!
இலக்கிய வரிகளை, கருத்துகளைத்தன் திரைப்படப் பாடல்களில்கலக்கிக் கொடுத்த கண்ணதாசனுக்குக்கம்பன் மேல் தணியாத காதல்!கம்பன் மேல் கரைகடந்தகாதல் கொள்ளாதகவிஞன் எவனுண்டு!
கம்பனைப் பாட வரும்கண்ணதாசன்,'பத்தாயிரம் கவிதைகளை முத்தாக அள்ளிவைத்த கம்பனுக்கு ஈடு - இன்னும்வித்தாகவில்லை என்றே நீ பாடு'என்று பாடுகிறான்!