Tuesday, July 8, 2008

கண்ணதாசன் ரசித்த கம்பன் -(6)

கம்பனில், கவியரசர் திளைத்து ரசித்த பகுதிகள்
பலவற்றையும் பார்த்து வரும்வேளையில், விதி பற்றிய
பாடல் ஒன்றை அவர் பெரிதும் ரசித்திருப்பதைக்
காணமுடிகிறது.

பாடல் இடம் பெற்ற படம் : தியாகம்பாடல் வரிகள் :

நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றமின்றிவேற யாரம்மா!

சிறப்பான இந்த வரிகளுக்குப் பிறப்பெடுத்துக் கொடுத்தவை
கம்பனின் காவிய வரிகளே!
முடிசூட்டல் இராமனுக்கே எனமுடிமன்னன் தயரதன் முடிவுசெய்கிறான்.செய்தி கேட்டு வெகுண்டெழுகிறாள், மனமுடைகிறாள்'தீயவை யாவினும் சிறந்த
தீயாளா'கிய கூனி.கைகேயி அரண்மனையை
அடைகிறாள்.அஞ்சுகம் எனப் பஞ்சணையில்
படுத்துறங்கும்அவளை உலுக்கி எழுப்புகிறாள்.
அவளைச் சீண்டுகிறாள்வரம் ஒன்றினால்
இராமன் காடேகவும் மற்றதனால்பரதன்
நாடாளவும் மன்னனிடம் கேட்குமாறு தூண்டுகிறாள்.
இருவருக்கும் இடையேவாதம், விவாதம் தூள் பறக்கின்றன!

இறுதியில் -
திண்ணிய நெஞ்சினளாகிய கூனிமந்தரை வந்த
வேலையைஎண்ணிய காரியத்தைக் கச்சிதமாக முடிக்கிறாள்.
தேவி தூய சிந்தையும் திரிகிறது.முடிசூட்டல் இல்லை இராமனுக்கு எனக்கேட்ட இளவல் இலக்குவன் காலத் தீ எனக் கொதிக்கிறான்.
"சிங்கக் கு;டிக்கு ஊட்ட இருந்த தீஞ்சுவை ஊனை நாயின்வெங்கண் குட்டிக்கு ஊட்ட நினைத்தனளே கைகேயி!என்னே அவள் அறிவின் திறம்" என்று சீறிவானுக்கும் பூமிக்குமாய்க் குதிக்கிறான் :
சொன்ன சொல்லை மாற்றிவிட்டமன்னவனைத் தந்தையாக எண்ண அவன் மனம் ஒப்பவில்லை!
"சூட்டுவேன் இராமனுக்கே முடி நான் யாரெனக்காட்டுவேன். இதற்குத் தடையாக அந்தமூவருமே வந்தாலும் சரி தேவருமே வந்தாலும் சரியாவரையும் அழித்தொழிப்பேன். இதனைத்தடுப்பவர்கள் முடிந்தால் தடுத்துக்கொள்ளுங்கள்"தம்பியின் தனி ஆவேசக் குரல் கேட்டுநம்பியும் ஓடோடி வருகிறான்.
"இதுவரை எவரையும் சொல்லால் சுடாத தம்பியேஇது என்ன புதுக் கோலம்,ஏனிந்தக் கோபம்?" இனிய சொல்லெடுத்து இராமன் கேட்க"வலக்கார் முகம்என் கையதாக அவ்வானுளோரும்விலக்காரவர் வந்துவிலக்கினும் என்கை வாளிக்குஇலக்கா எரிவித்துலகு ஏழினொடு ஏழும் மன்னர்குலக்காவலு மின்றுனக்கு யான்தரக் கோடியென்றான்"இலக்குவன்.(தேவர்களே வந்தாலும் அவர்களை என் அம்புகளுக்கு இரையாக்குவேன்,ஈரேழு உலகங்களையும் யான் அளித்து உனக்கு முடி நான் சூட்டநீ பெற்றுக்கொள்வாயாக! - இதுதான் இதன் பொருள்)
இந்தப் பாடலைக் கம்பன் அமைத்திருக்கும்ஓசை நயத்தோடு படித்துப்பாருங்கள்.
கூற்றம் எனக் கொதிக்கும் இலக்குவனின் சீற்றமும்விண்ணுக்கும் மண்ணுக்குமாய்க் குதிக்கும் அவன் தோற்றமும்கண்முன்னே தெளிவாகத் தெரியும்!
அவன் கோப மன நிலை புரியும்.அவனை இராமன் அமைதிப் படுத்துகிறான்.இலக்குவனின் கோபத் தொனிக்கு மாறாகஇராமனின் குரலொலிக்கிறது :"நதியின் பிழையன்று நறும்புன லின்மையற்றேபதியின் பிழையன்று பயந்துநமைப் புரந்தாள்மதியின் பிழையன்று மகன்பிழையன்று மைந்தவிதியின் பிழைநீயிதற் கென்கொல் வெகுண்டதென்றான.;"இந்தப் பாடலையம் இந்தச் சந்தத்தோடு படித்தால்இராமனின் சாந்தத்துக்கு ஏற்பக் கம்பன் சந்தம் அமைப்பதை உணரலாம்.
(கம்பனின் பாடல்களில் எல்லாம் அந்த அந்தச் சூழ்நிலை, பாத்திரங்களின்தன்மைக்கு ஏற்பவே சந்தங்கள் அமைந்திருக்கும்.எனவே கம்பனின் கவிதைகளை ரசிக்க விரும்வோர்அவற்றை வாய்விட்டு உரிய சந்தத்தோடு படித்தல் வேண்டும்.அப்போது தான் கம்பனை முழுமையாக உணர முடியம் ரசிக்கவும் முடியும்!).
கவியரசர் இப்படித்தான் கம்பனை ரசித்திருப்பார்.அதனால் தான் இந்தப் பாடல் வரிகளையும் கருத்துகளையும்தன் திரைப் பாடலில் பக்குவமாய் எடுத்துக் கையாண்டிருக்கிறார்.கண்ணதாசன் பாடல்களுக்குவிரிவுரையோ விளக்க உரையோபதவுரையோ பொழிப்புரையோ தேவை இல்லை!
மாறாகக் கம்பன் பாடல்களைப் படிப்பதற்கும்பொருள் உணர்ந்துகொள்வதற்கும் பயிற்சி தேவை!
அதனால்தான் இக்கட்டுரைகளில்கம்பன் கவிதைகளுக்குச்சுருக்கமான விளக்கம் தேவை ஆயிற்று.இனி,கம்பன் பாடியதாகக்கண்ணதாசன் உட்படப் பலரும் தவறாகஎண்ணிக்கொண்டிருக்கும் பாடல் வரி ஒன்றைச் சொல்லிஅதனைக் கண்ணதாசன் பயன்படுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டிஅது போலவேகம்பன் காட்டாத காட்சி ஒன்றைக்கம்பன் காட்டி இருப்பதாகக் கருதிக்கண்ணதாசன் எழுதிய வரிகளைக் கூறிஇந்தக் கட்டுரைக்கு மங்களம் பாடிவிடலாம்.அது நாள் வரைஅதுதான் நாளை வரைகொஞ்சம் பொறுத்திருங்களேன்.பிரான்சிலிருந்து அன்பன்பெஞ்சமின்.

No comments: