

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
என்னுயிர்த் தோழி,
இனிதே வாழி!
என்னவனைப் பற்றி எழுதச்
சொன்னாய்,
அந்த என்னவன் -பாண்டியன்
பரிசு தந்த தென்னவன், எனை
ஆளும் மன்னவன்!
புதுவைக் குயில், புரட்சிக் கனல்!
ஏற்றமிகு தோற்றம் அவனுக்கு-
நிமிர்ந்த நெஞ்சு,
நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத் தோற்றம்!
திமிர்ந்த ஞானச் செருக்கு! வானளந்த
புகழை எல்லாம் தேனளந்த தமிழாலே
தானளந்த தமிழ் மகன். இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற கவிஞன்! அவன் படைத்த
காதல் கவிதைகள்- தமிழ்த்; தேனில்
ஊறிய பலாச் சுளைகள்!
புரட்சிப் பாடல்களோ பொங்கும் எரிமலைகள்!
அந்த புரட்சிக் கவியிடம் உள்ளத்தைப்
பறிகொடுத்தேன். அவன் அழகின் சிரிப்பிலே
எனை மறந்தேன்!
சஞ்சீவி பர்வத்தின் சாரலிலே கொஞ்சி மகிழ்ந்தேன்.
தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத
அவன் தமிழ் உணர்வில் நெகிழ்ந்தேன்.
அவன் அளித்த எதிர்பாராத முத்தம் நெஞ்சில்
இனிக்குமே நித்தம். குடும்ப விளக்கென
என்னைக் கொண்டாடும் அவனை மணந்தேன்.
அவனும் நானும் - ' வெண்ணிலாவும் வானும்
போலேவீரனும் கூர் வாளும் போலேவண்ணப்பாவும்
மணமும் போலே ' இணைபிரியாமல் இனிதே
வாழ்ந்து வருகிறோம்.
எங்கள் ஊடலில், கூடலில், உறவாடலில் எத்தனை
எத்தனை பாடல்கள்! அவற்றுள் சிலவற்றை
உனக்குச் சொல்லட்டுமா?
ஒருநாள்.... ' என்மீது உனக்கேன் இவ்வளவு காதல்? '
என்றேன். அவ்வளவில்,;
' தென்னவளே, தேனமுதே! என்னடி அப்படிக் கேட்டு
விட்டாய், மூவேந்தர் மடி வளர்ந்த முத்தமிழ்ச் செல்வி நீ!
பாவேந்தர் பாடிவளர்த்த பாவை நீ!
தமிழ், தமிழ், தமிழ் என உன் பெயரை உரைக்கும்
போதெல்லாம் என் நாவில் ஊறுவது அமிழ்தல்லவா!
அதனால்தான், என் உயிரே உன் மீது காதலாகிக்
கசிந்து உருகித்' தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு
நேர்'எனப் பாடினேன் என்றானடி அவன்.
பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம்
மெதுவாகத் தொடங்கினேன் :
' கண்டு கேட்டு உண்டு, உயிர்த்து உற்றறியும்
ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள எனப்
பெண்ணின்பத்தைப் புகழ்ந்து வள்ளுவர் பாடினார்.
வள்ளலாரோ -
'காமமிகு காதலன்தன் கலவிதனைக் கருதுகின்ற
ஏமமிகு கற்பினள்;தன் இன்பினும் இன்பாயது
"இறைவனேடு இணைகின்ற பேரின்பம் என
அதனைத் தேடினார். நீயோ அவர்கள் இருவரையும்
விஞ்சிவிட்டாய் ' என்றேன்.
உடனே, ' எப்படி, எப்படி, எப்படி? ' எனத் துடித்தான்.
' அப்படி வா வழிக்கு, ' மங்கை ஒருத்தி தரும்
சுகமும் மாத்தமிழுக்கு ஈடில்லை 'எனப் பாடியவன்
நீ தானே ' என்று மடக்கினேன்!
' ஆமடி, அஃதுண்மை தானடி, ஊனில் கலந்து
உயிரில் கலந்து உவட்டாமல் இனிக்கின்ற,'
செந்தமிழே நறுந்தேனே என் செயலினை
மூச்சினை உனக்களித்தேனேநைந்தாய்
எனில் நைந்துபோகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந்
தானே! 'என்று என்னை வாரி அணைத்துக்
கொண்டானடி, என் தோழி.
சஞ்சீவி பர்வத்தின் சாரலிலே வம்புக்கு
சஞ்சீவி பர்வத்தின் சாரலிலே வம்புக்கு
இழுத்தேன் :'ஐயா கனக சுப்புரத்தினமே தாங்கள்
பாரதிதாசனாக மாறிய மர்மம் என்னவோ?
' உடனே, 'நமக்குத் தொழில் கவிதை எனப் பெரு
மிதங்கொண்ட முறுக்கு மீசைப் புலவனுக்குத்
தாசனடி நான். அதனாலே, இந்தப் பெயர் மாற்றம்
' என்று இந்த
நறுக்கு மீசைக் கவிஞன் சொன்னான்.
விடுவேனா நான், மேலும் சீண்டினேன் : ' ஏய்,
'கண்ணாடிக் கன்னத்தைக் காட்டி என்றன்
உள்ளத்தைப்புண்ணாக்கிப் போடாதேபோ
போ போய்விடு'எனச் சற்றுமுன் என்னை
விரட்டியவனே, பச்சைப் பொய் சொல்கிறாய்!
பாரதியாருக்கா தாசன்? இல்லை, இல்லை,
பாரதி என்றால் கலைமகள் அல்லவா!
பாரதி என்ற பெண்ணுக்கு அல்லவா நீ தாசன்..... '
முடிக்கவில்லை நான்.
துடித்துப்போனான் அவன் : 'அய்யய்யோ, அப்படி
இல்லையடி என் முல்லையே... ' அவனுக்கோ
பதைப்பு எனக்குள்ளோ நகைப்பு!
ஊடலைத்
தொடர்ந்தேன் : 'ஓகோ ஓ, அப்படி இல்லையா?
பின்னே, பார் ரதிக்குத் தாசன் என்று மார்
தட்டுகிறாய் போலும்.' என்றதுதான் தாமதம்.
உடனடியாய் அவன், 'வட்டெழுத்தாய் உள்ளத்தை
வளைக்காதே! நெட்டெழுத்தாய் ஊடலில்
திளைக்காதே... கட்டழகே கன்னித்
தமிழே, பார்! அதி தாசன் உனக்கே தான் என்றான்.
' 'வந்தாயா வழிக்கு' என்று நெஞ்சுக்குள் நான்
மகிழ்ந்தே, நீலப் புடவையால் நிலா முகம்
மறைத்தேனோ இல்லையோ, தென்றலாய்
அவன் கவிதை வந்தென்னைத் தொட்டது :
'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவேன்று காட்டுகின்றாய் ஒளிமு கத்தைக்
கோலம்முழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ!
வானச்சோலையிலே பூத்த தனிப் பூவோ
நீதான்சொக்கவெள்ளிப் பாற்குடமோ
அமுத ஊற்றோ'
மனத்தை மயக்கும் மாலைப் பொழுதில்
மனத்தை மயக்கும் மாலைப் பொழுதில்
என்னை அவன் சீண்டியதும் உண்டு :
'காலை இளம் பரிதியிலே அவளைக்
'காலை இளம் பரிதியிலே அவளைக்
கண்டேன்கடற்பரப்பில் ஒளிப்புனலில்
அவளைக் கண்டேன் 'என்று அவன் பாடிவரு
முன்னே,'ஓகோ எவளைக் கண்டாய் ' என்று
அதட்டினேன் பாரேன்,
உடனே,'.............................................................அங்கெல்லாம்
அழகென்பாள் கவிதை தந்தாள் 'என அழகாகப்
பாடி முடித்துவிட்டான். 'போதும் போதும்,
அவளைப் பாடியது போதும் நம்மைப் பாடெ' ன்றேன்.
'வேற்றுமொழிப் பாடத்திலே மயங்கிக் கிடந்தேன்
வீட்டு வாசலுக்கு வந்தென்னை ஆட்கொண்டாய்.
அதனைப் பாடவா' என்று கேட்டான். இம் என்னும்
முன்னே அவன் கவிதை அருவி எனப் பொங்கிப்
பெருகியது :
'கூடத்திலே மனப் பாடத்திலேகூடிக் கிடந்திட்ட ஆணழகைஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால்உண்ணத் தலைப்படும் நேரத்திலேபாடம் படித்து நிமிர்ந்த விழிதன்னில்பட்டுத் தெறித்தது மானின்விழிஆடை திருத்தி நின்றாள் அவன்ஆயிரம் ஏடுகள் திருப்புகின்றான். '
மாலைத் தென்றலாய் மனத்தைக் கவரும் மாணிக்க வரிகள்! ஒவ்வொரு சொல்லும் ஓராயிரம் பொன் பெறுமே! தெறித்தது என்ற சொல் உணர்த்தும் பொருள்... அப்பப்பா! கோலி குண்டு இரண்டு மோதினால் ஒன்றை ஒன்று ஒருகணம் தொட்டு மறுகணம் இரண்டும் இரு திசை நோக்கித் தெறித்துப் போகுமே! அதுபோல, ஆசை எனும் விசையோடு வந்து தாக்கிய வண்டு விழிகள் அவன் விழிகளோடு மோதித் தெறித்தனவாம். ஒன்றினை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிடக் கவ்விய விழிகளைக் கம்பன் காட்டுவான். பட்டுத் தெறிக்கும் விழிகள் வழியே துளிர்க்கும் காதலைத் துல்லியமாகக் காட்டி விடுகிறான், என்னவன். குலையாத ஆடையை அவள் திருத்துகிறாளாம் நூறு பக்கம் கூட வராத நூலில் இவன் ஆயிரம் ஏடுகள் திருப்புகிறானாம்! நிலை குலைந்த நெஞ்சங்கள் உளம் ஒன்றிப் போன அழகிய காதல் காட்சி!
தாபப் பாடல்களில் இவன் தென்றல் காற்று, கோபப் பாடல்களிலே புரட்சி ஊற்று. அவன் காலத்துத் தமிழகத்தின் தலைநகரில் தமிழ்தானில்லை என்ற நிலைதனை மாற்றிடத் துடிக்கிறான். ஊமைகளாய் ஆமைகளாய் உறங்கிக்கிடந்த தமிழ் இனத்தைத் தட்டி எழுப்பக் கவிதைக் கனல் வடிக்கிறான், போர்ப்பறை என அவன் ஆர்ப்பரிப்பதைக் கேள் என் தோழி :'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்ததுசிறுத்தையே வெளியே வா..............எலிஎன உன்னை இகழ்ந்தவர் புகழ்ந்திடப்புலிஎனச் செயல்படப் புறப்படு வெளியில்......................................சிங்க இளைஞனே திருப்புமுகம் திறவிழிஇங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா? '
நாமமது தமிழர் எனக் கொண்டிங்கு வாழ்ந்து வந்தவர்களை உலுக்கி அவன் எழுப்புவதை உரத்துப் பாடுகிறேன் கேள் :'வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?மொழிப்பற் றெங்கே விழிப்புற் றெழுக! '
அதுமட்டுமா, தமிழர்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டுகிறான் பார் :'தமிழின் நலங்கெடல் எங்கெல்லாம் அங்கெல்லாம்தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால் எனக் கொதித்துப் பாடினார் பாரதியார். இவனோ, தமிழ் மாந்தர் நிலைகெட வைத்தவர்களைப் பூண்டோடு வேரறுத்தல் வேண்டும். அதனால்,'கொலை வாளினை எடடா மிகக்கொடியோர் செயல் அறவே'எனக் குதித்துச் சாடுகின்றான்.
புரட்சிக் கவி என்ற நூலை எழுதிய காரணத்தால் மட்டுமே இவன் புரட்சிக் கவிஞன் ஆகிவிடவில்லை! இக்காலத்தில் மிகவும் பழகிப்போன கருத்துக்கள் இவன் காலத்தில்- அரை நூற்றாண்டுக்கு முன்னால் - இவன் கவிதையில் பூத்த புரட்சிப் பூக்கள்! கருத்தடையும் கருச்சிதைவும் தெருவெங்கும் மலிவாகிப் போனது இக்காலம். ஆனால் அன்றோ அதனைப் பற்றி எண்ணவும் நாணினர் பேசவும் கூசினர். 'மக்கள் தொகைப் பெருக்கம் இறைவன் தந்த வரம், அதனைக் குறைக்க முயல்வது பாவம்... 'என நம்பிய ஆட்டு மந்தைக் கூட்டத்திலே அரிமாவாய் இவன் குரல் ஒலிப்பதைக் கேள் :'காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக்கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?சாதலுக்கோ பிள்ளை தவிப்பதற்கோ? 'கருத்தடைக்கு வழிகாணச் சொல்கிறானே தவிரக் கருகலைப்புக்கு வழிவகுக்கச் சொல்லவில்லை என்பதைக் கவனி;.
மேலும் தொடரட்டுமா என் தோழி :
*****************************************************************'பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டுமண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே'எனப் பெண்ணுரிமைக்குக் குரல் தரும் இவன் இளம் விதவைகளின் நிலை கண்டு பரிதவிக்கிறான். 'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் 'எனக் கவிதை பாடலாம் ஆனால் இணைவிழைச்சால் வாடும் நெஞ்சுக்குக் கவிதைப் போர்வை மட்டும் போதுமா? விதவை என்று சொல்லி வெறுங் கதவை மூடுவதால் உணர்ச்சி அலைகள் ஓயுமா? இயல்பான பருவப் பசி மாயுமா? பதினாறு வயதில் அறுதலியாய் வாழவேண்டும் என்றால் முடியுமா? இயற்கைதான் விடுமா? விதவைக் கோலம் காலத்தின் கட்டாயமாக்கப்பட்ட ச+ழலில் இவன் தனிக்குரல் கவிதை நயத்தோடு வினா எழுப்புகிறது :'பாடாத தேனீக்கள் பசியாத நல்வயிறு பார்த்தது உண்டோ? '
வாழ்வு பெற இயலாமல் துடிக்கும் விதவைகளின் தாழ்வு கண்டு பொருமுகிறான் 'கோரிக்கை அற்றுக் கிடக்கு தண்ணே- இங்குவேரிற் பழுத்த பலா'என்று.
இந்த வேர்ப் பலாக்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்க என்ன தடை? 'மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை? 'இவன் எழுப்பும் சிந்தனைக் கேள்வி!
கூட்டுறவே நாட்டுயர்வு என்று கொடிபிடித்துக்'கூடித் தொழில் செய்யாக் குற்றத்தால்மூடிக் கிடக்கும் தொழிற்சாலை முக்கோடி'எனப் பாடிய இவன் கவிதைகளில் வெடித்துச் சிதறும் புரட்சிக் கருத்துக்கள் பலப்பல. இப்போது பரியுமடி உனக்கு இவன் எப்படி புரட்சிக்கவி ஆனான் என்று.
புரட்சிப் ப+க்கள் மலரும் இவன் மனத்தில் விரிந்த கனவுகள் எத்தனை, எத்தனை தெரியுமா? தமிழன் தரணி ஆளவேண்டும் என்பதே இவனின் தணியாத ஆசை. அதுவும் சாதாரணமாக அல்லவாம் பின்னே? தமிழன்'ஆட்டும் சுட்டுவிரல் கண்டேஆடிற்று வையம் என்றுகேட்டின்பக் கேணியில்குளிக்கும்நாள் எந்நாளோ?' என ஏங்கியது இவன் தமிழ் உள்ளம்.
காதற் சுவையை அள்ளி வழங்கியவன், புரட்சிக் கனலாய் முழங்கியவன் ஆங்காங்கே நகைச்சுவையையும் இழைத்திருக்கிறான். ஒன்றே ஒன்று கூறுகி;றேன்: அப்போது இருந்த அமைச்சர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இடைவெளி அதிகம். நாட்டவரை ஆதரிப்பீர் என்று அமைச்சர் ஒருவரிடம் கூறினானாம். சாப்பாட்டு ராமனான அவரோ, 'ஆமாம், ஆமாம், நாட்டு அவரை கூட்டுக்கும் நன்று குழம்புக்கும் நன்று!' என்று சொன்னாராம். அதனைக் கேட்டுக் கோபத்தோடு 'மாட்டுக்கா வாய்க்கும் தமிழ்?' எனச் சிரித்தான் நானும் நகைத்தேன்.
உள்ளுர்த் தமிழருக்கும் உலகளாவிய தமிழருக்கும் அவன் முழக்கிய சங்கநாதம் இன்றும் ஒலிக்கிறதே :'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்மங்காத தமிழ்என்று சங்கே முழங்குஎங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே'இதன்படி நடந்தால், தமிழர்கள் தரணி ஆளத் தடை ஏதடி தோழி!
என்னவனைப் பற்றி இன்னும் எழுதலாம், திருக்குறளுக்குப் புரட்சி உரை படைத்தவன் கவிதைக் கலை வளரக் குயில் தாளிகை நடத்தியவன்,; நான் சொன்னபடி கேட்பான்,'தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போவென்று சொன்னாள் உன் அன்னை'என்று சின்ன குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைப்பான். இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேனடி தோழி! என்னவனைப் பற்றிச் சொன்னது கொஞ்சம் என்ன இருந்தாலும் வானத்தைப் பிடித்து நாலு சுவர்களுக்குள் அடைத்துவிட முடியுமா, சொல் தோழி!
மற்றவை மறுமடலில்!
'கூடத்திலே மனப் பாடத்திலேகூடிக் கிடந்திட்ட ஆணழகைஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால்உண்ணத் தலைப்படும் நேரத்திலேபாடம் படித்து நிமிர்ந்த விழிதன்னில்பட்டுத் தெறித்தது மானின்விழிஆடை திருத்தி நின்றாள் அவன்ஆயிரம் ஏடுகள் திருப்புகின்றான். '
மாலைத் தென்றலாய் மனத்தைக் கவரும் மாணிக்க வரிகள்! ஒவ்வொரு சொல்லும் ஓராயிரம் பொன் பெறுமே! தெறித்தது என்ற சொல் உணர்த்தும் பொருள்... அப்பப்பா! கோலி குண்டு இரண்டு மோதினால் ஒன்றை ஒன்று ஒருகணம் தொட்டு மறுகணம் இரண்டும் இரு திசை நோக்கித் தெறித்துப் போகுமே! அதுபோல, ஆசை எனும் விசையோடு வந்து தாக்கிய வண்டு விழிகள் அவன் விழிகளோடு மோதித் தெறித்தனவாம். ஒன்றினை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிடக் கவ்விய விழிகளைக் கம்பன் காட்டுவான். பட்டுத் தெறிக்கும் விழிகள் வழியே துளிர்க்கும் காதலைத் துல்லியமாகக் காட்டி விடுகிறான், என்னவன். குலையாத ஆடையை அவள் திருத்துகிறாளாம் நூறு பக்கம் கூட வராத நூலில் இவன் ஆயிரம் ஏடுகள் திருப்புகிறானாம்! நிலை குலைந்த நெஞ்சங்கள் உளம் ஒன்றிப் போன அழகிய காதல் காட்சி!
தாபப் பாடல்களில் இவன் தென்றல் காற்று, கோபப் பாடல்களிலே புரட்சி ஊற்று. அவன் காலத்துத் தமிழகத்தின் தலைநகரில் தமிழ்தானில்லை என்ற நிலைதனை மாற்றிடத் துடிக்கிறான். ஊமைகளாய் ஆமைகளாய் உறங்கிக்கிடந்த தமிழ் இனத்தைத் தட்டி எழுப்பக் கவிதைக் கனல் வடிக்கிறான், போர்ப்பறை என அவன் ஆர்ப்பரிப்பதைக் கேள் என் தோழி :'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்ததுசிறுத்தையே வெளியே வா..............எலிஎன உன்னை இகழ்ந்தவர் புகழ்ந்திடப்புலிஎனச் செயல்படப் புறப்படு வெளியில்......................................சிங்க இளைஞனே திருப்புமுகம் திறவிழிஇங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா? '
நாமமது தமிழர் எனக் கொண்டிங்கு வாழ்ந்து வந்தவர்களை உலுக்கி அவன் எழுப்புவதை உரத்துப் பாடுகிறேன் கேள் :'வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?மொழிப்பற் றெங்கே விழிப்புற் றெழுக! '
அதுமட்டுமா, தமிழர்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டுகிறான் பார் :'தமிழின் நலங்கெடல் எங்கெல்லாம் அங்கெல்லாம்தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால் எனக் கொதித்துப் பாடினார் பாரதியார். இவனோ, தமிழ் மாந்தர் நிலைகெட வைத்தவர்களைப் பூண்டோடு வேரறுத்தல் வேண்டும். அதனால்,'கொலை வாளினை எடடா மிகக்கொடியோர் செயல் அறவே'எனக் குதித்துச் சாடுகின்றான்.
புரட்சிக் கவி என்ற நூலை எழுதிய காரணத்தால் மட்டுமே இவன் புரட்சிக் கவிஞன் ஆகிவிடவில்லை! இக்காலத்தில் மிகவும் பழகிப்போன கருத்துக்கள் இவன் காலத்தில்- அரை நூற்றாண்டுக்கு முன்னால் - இவன் கவிதையில் பூத்த புரட்சிப் பூக்கள்! கருத்தடையும் கருச்சிதைவும் தெருவெங்கும் மலிவாகிப் போனது இக்காலம். ஆனால் அன்றோ அதனைப் பற்றி எண்ணவும் நாணினர் பேசவும் கூசினர். 'மக்கள் தொகைப் பெருக்கம் இறைவன் தந்த வரம், அதனைக் குறைக்க முயல்வது பாவம்... 'என நம்பிய ஆட்டு மந்தைக் கூட்டத்திலே அரிமாவாய் இவன் குரல் ஒலிப்பதைக் கேள் :'காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக்கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?சாதலுக்கோ பிள்ளை தவிப்பதற்கோ? 'கருத்தடைக்கு வழிகாணச் சொல்கிறானே தவிரக் கருகலைப்புக்கு வழிவகுக்கச் சொல்லவில்லை என்பதைக் கவனி;.
மேலும் தொடரட்டுமா என் தோழி :
*****************************************************************'பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டுமண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே'எனப் பெண்ணுரிமைக்குக் குரல் தரும் இவன் இளம் விதவைகளின் நிலை கண்டு பரிதவிக்கிறான். 'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் 'எனக் கவிதை பாடலாம் ஆனால் இணைவிழைச்சால் வாடும் நெஞ்சுக்குக் கவிதைப் போர்வை மட்டும் போதுமா? விதவை என்று சொல்லி வெறுங் கதவை மூடுவதால் உணர்ச்சி அலைகள் ஓயுமா? இயல்பான பருவப் பசி மாயுமா? பதினாறு வயதில் அறுதலியாய் வாழவேண்டும் என்றால் முடியுமா? இயற்கைதான் விடுமா? விதவைக் கோலம் காலத்தின் கட்டாயமாக்கப்பட்ட ச+ழலில் இவன் தனிக்குரல் கவிதை நயத்தோடு வினா எழுப்புகிறது :'பாடாத தேனீக்கள் பசியாத நல்வயிறு பார்த்தது உண்டோ? '
வாழ்வு பெற இயலாமல் துடிக்கும் விதவைகளின் தாழ்வு கண்டு பொருமுகிறான் 'கோரிக்கை அற்றுக் கிடக்கு தண்ணே- இங்குவேரிற் பழுத்த பலா'என்று.
இந்த வேர்ப் பலாக்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்க என்ன தடை? 'மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை? 'இவன் எழுப்பும் சிந்தனைக் கேள்வி!
கூட்டுறவே நாட்டுயர்வு என்று கொடிபிடித்துக்'கூடித் தொழில் செய்யாக் குற்றத்தால்மூடிக் கிடக்கும் தொழிற்சாலை முக்கோடி'எனப் பாடிய இவன் கவிதைகளில் வெடித்துச் சிதறும் புரட்சிக் கருத்துக்கள் பலப்பல. இப்போது பரியுமடி உனக்கு இவன் எப்படி புரட்சிக்கவி ஆனான் என்று.
புரட்சிப் ப+க்கள் மலரும் இவன் மனத்தில் விரிந்த கனவுகள் எத்தனை, எத்தனை தெரியுமா? தமிழன் தரணி ஆளவேண்டும் என்பதே இவனின் தணியாத ஆசை. அதுவும் சாதாரணமாக அல்லவாம் பின்னே? தமிழன்'ஆட்டும் சுட்டுவிரல் கண்டேஆடிற்று வையம் என்றுகேட்டின்பக் கேணியில்குளிக்கும்நாள் எந்நாளோ?' என ஏங்கியது இவன் தமிழ் உள்ளம்.
காதற் சுவையை அள்ளி வழங்கியவன், புரட்சிக் கனலாய் முழங்கியவன் ஆங்காங்கே நகைச்சுவையையும் இழைத்திருக்கிறான். ஒன்றே ஒன்று கூறுகி;றேன்: அப்போது இருந்த அமைச்சர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இடைவெளி அதிகம். நாட்டவரை ஆதரிப்பீர் என்று அமைச்சர் ஒருவரிடம் கூறினானாம். சாப்பாட்டு ராமனான அவரோ, 'ஆமாம், ஆமாம், நாட்டு அவரை கூட்டுக்கும் நன்று குழம்புக்கும் நன்று!' என்று சொன்னாராம். அதனைக் கேட்டுக் கோபத்தோடு 'மாட்டுக்கா வாய்க்கும் தமிழ்?' எனச் சிரித்தான் நானும் நகைத்தேன்.
உள்ளுர்த் தமிழருக்கும் உலகளாவிய தமிழருக்கும் அவன் முழக்கிய சங்கநாதம் இன்றும் ஒலிக்கிறதே :'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்மங்காத தமிழ்என்று சங்கே முழங்குஎங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே'இதன்படி நடந்தால், தமிழர்கள் தரணி ஆளத் தடை ஏதடி தோழி!
என்னவனைப் பற்றி இன்னும் எழுதலாம், திருக்குறளுக்குப் புரட்சி உரை படைத்தவன் கவிதைக் கலை வளரக் குயில் தாளிகை நடத்தியவன்,; நான் சொன்னபடி கேட்பான்,'தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போவென்று சொன்னாள் உன் அன்னை'என்று சின்ன குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைப்பான். இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேனடி தோழி! என்னவனைப் பற்றிச் சொன்னது கொஞ்சம் என்ன இருந்தாலும் வானத்தைப் பிடித்து நாலு சுவர்களுக்குள் அடைத்துவிட முடியுமா, சொல் தோழி!
மற்றவை மறுமடலில்!
இவண்,
உன்னுயிர்த் தோழி,
உன்னுயிர்த் தோழி,
செந்தமிழ்ச் செல்வி.
No comments:
Post a Comment