Saturday, April 26, 2008

<>தவறான கண்ணோட்டம் (பகுதி 1)<>



பாரதிதாசனைப் பற்றிய
தவறான கண்ணோட்டம்
பேரா.பெஞ்சமின் லெபோ, பிரான்சு.

தணியாத காதல் தமிழ் மீது கொண்டு அணிஅணியாகத்தமிழ் உணாச்சிப் பாடல்களைப் புனைந்தவர்புதுவைக் கவிஞர் பாரதிதாசனார்.
கனகசுப்பு ரத்தினம் எனபது இவர்தம் இயற்பெயர்.இவரை ஈர்த்த பெருங்கவிஞர் பாரதியார். இந்த ஈர்ப்பின்விளைவாகத்தான் தம் இயற்பெயரையே பாரதிதாசன் எனமாற்றிக்கொண்டவர்.
பாரதிதாசன் பற்றித் தவறான கருத்துகள்பல தோன்ற இப்பெயரே காரணமாயிற்று. பாரதிதாசனின்வரலாறு சரிவரத் தெரியாத பலர், அவருக்கும் பாரதிக்கும்இருந்த உறவினைத் திரித்துப் புரிந்துகொண்டிருக்கின்றனர்.காட்டாக,
1)பாவேந்தன் என்ற அடையை விடப் புரட்சிக்கவி என்றஅடையே பாரதிதாசனுக்குப் பொருந்தும் என மிகச் சிறப்பாகவாதிடும் கவிஞர் கவிஞர் தணிகைச் செல்வன் கூட,'பாரதிதாசனின் ஆசான் என்று பாரதி கருதப்பட்டாலும்,பாரதியின் கருத்துகள்,பிரான்சு.மலர்ச்சியைச்
சார்ந்தனவாயிருந்தன." என்றுதான் எழுதுகிறார். (காண்க : நன்றி கீற்றுளுரனெயல, 6 ஆயல, 2007 பாரதி எ பாரதிதாசன்).2) 2005 -ஆம் ஆண்டு மே மாதம் கனடா நாட்டில் கவிஞர்புகாரி அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.அவ்விழாவில் கவிஞர் நூலுக்கு மதிப்புரை வழங்கிய திரு ஜெயபாரதன்' அழகின் சிரிப்பு நூலை விரித்துக் கவிதைகளை ஊன்றிப் படித்தேன்.

பாரதிக்குத் தாசர் அல்லவா? பாரதியாரைப் போல் இருக்கிறாரா என்றுஆய்ந்தேன். பாரதியைப் படித்த எனக்குப் பாரதிதாசனின் சில கவிதைகளைப்படித்த பின், அவர் மீது ஏனோ பிடிப்பு ஏற்பட வில்லை!; "என்கிறார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரு கிரீதரன் ('பதிவுகள்' ஆசிரியர்) எழுதிஉள்ளார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் திரு ஜெயபாரதன்,"...ஆனால் பாரதியின்நிழலில் தோன்றித் தன் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்ட கவிஞர் சுப்புரத்தினம் மெய்யாகப் பாரதியாரின் சீடராஎன்பதைத்தான் நான் சிந்தித்து உளவு செய்கிறேன்.

முதலில் பாரதியின் சீடராய்த் துவங்கிப்பாதி காலத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்டு வேறுவடிவில் உலவி வந்தார் பாரதிதாசன் என்பதைத்தான் நான்கூற விரும்புகிறேன். " என எழுதுகிறார்.பாரதிதாசன் பற்றிப் பலரும் கொண்டுள்ள (தவறான)கருத்துகளைத்தான் இவர்களும் வெளிப்படுத்தி உள்ளனர்.அதாவது, கனகசுப்பு ரத்தினம் பாரதியாரிடம் பயின்றவர்,பாரதியின் மாணாக்கர், பாரதியால் உருவானவர்... என்பதுஇவர்கள் கொண்டுள்ள கருத்து.உண்மை என்ன? பாரதி புதுவைக்கு வருமுன்னரே,கனகசுப்பு ரத்தினம் தம் (தமிழ், பிரஞ்சு) கல்வியைமுடித்து ஆசிரியர் பணியிலும் அமர்ந்துவிட்டிருந்தார்.கனகசுப்பு ரத்தினம் முறையாகத் தமிழ் (திரு பங்காருசாமிப்பத்தர் என்னும் புகழ்பெற்ற புதுச்சேரிப் புலவரிடம்) பயின்றவர்.யாப்பிலக்கணம் நன்கறிந்தவர். கவி புனையும் ஆற்றலும் மிக்கவர்.
ஆனால் பாரதி அப்படி அல்லர். கவிபாடும் வல்லமை இயற்கையாகஅவரிடம் அமைந்திருந்தது. மற்றபடி தமிழை முறையாகப்படித்தவரில்லை பாரதி, யாப்பும் அறிந்தவர் அல்லர்."... பாரதியாருக்குப் பள்ளிப் படிப்பில் மிகுதியாகப் பற்றில்லை...தொடக்க முதலே பாரதியார் ஆங்கிலக் கல்வி நிலையங்களிலேயேபடித்தார். தனித் தமிழ்; ஆசிரியரிடம் அவர் தமிழ்ப் பாடம் கற்றதில்லை." (பாரதியாரின் வாழ்க்கை வரலாறு - டாக்டர் தா.ஏ ஞானமூர்த்தி). பாரதிபாட்டுக்களில் இருந்த எழுத்துப் பிழைகளை, தட்டும் தளைகளை,யாப்புக் குறைகளைக் களைந்து திருத்தியவர் கனகசுப்பு ரத்தினம்தாம்!

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்-1 என்ற கட்டுரையில்திரு வெங்கட் சாமிநாதன் கூறுகிறார்:"புதுச்சேரியில் பாரதியின் நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்இன்னும் பலர் இருந்தனர். கவிஞர் பாரதிதாசன் (1891-1964) அவர்களில்ஒருவர். அவர் பாரதியாலேயே கவிஞராக முடிசூட்டப் பெற்றவர்.பாரதிதாசன் என்றே அவர் தன்னை அழைத்துக்கொண்டார்.

கவிஞராக மட்டுமே அவர் பாரதிக்கு நெருக்கமாக இருக்கவில்லை. ...பல பொறுப்புகளைப் பாரதிதாசன்தான் மேற்கொண்டிருந்தார்."எனவே, பாரதியார் இவரைத் தம் சீடராகப் பார்த்ததும் இல்லை,சீடராகப் பழகியதும் இல்லை! நண்பராகவும் தோழராகவும்தான்பார்த்திருக்கிறார், பழகி இருக்கிறார். எனவே கனகசுப்பு ரத்தினம்தன் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டாலும், அவர்பாரதியாருக்குச் சீடராக வாழவில்லை, தம் கவிதை வாழ்வையும்பாரதி நிழலிலே தொடங்கவில்லை. பாரதியார் புதுவை வாழ்வைத்தொடங்கும் முன்னரே கனகசுப்பு ரத்தினம் தனக்கெனஒரு பெயரைப் புதுவையிலே பெற்றிருந்தார்.

பாரதியாரும் கனகசுப்புவும் சந்தித்த அந்த முதற் சந்திப்பைஅடுத்த பகுதியில் காண்போம்.அச்சமயம் பாரதி சொல்லிய சொல்லைக் கனகசுப்புரத்தினமே பதிவு செய்த வரிகள் :

"கடைசியாக பாரதியார் சொல்லிய வார்த்தையை மாத்திரம்நான் மறந்து போகவில்லை. அது என் ஆவலைப் பூர்த்திசெய்யும் வார்த்தை. அந்த வார்த்தையை அவர் வெளியிட்டவுடன்என் நினைவில் அது தங்காமல் என்னை ஏமாற்றி விடக் கூடும்என்று அதன் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்து அமிழ்த்திக் கொண்டேன்.அவர் கூறிய வார்த்தைகளாவன:"வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு நீ அழைத்து வரலே?"

-மற்றவை அடுத்த பாகத்தில்.....

No comments: